Total Pageviews

Saturday, March 22, 2014

பெண்ணென்னும் பேரழகு - அடர்ந்த மரங்கள். அதன் குளுமையான நிழல். அது உன் இனிமைக்கு ஈடாகாது.







பெண்ணென்னும் பேரழகு 
----------
சலசலக்கும் சிற்றோடை.  
அது உனது சிரிப்பை சொல்கிறது.
அடர்ந்த மரங்கள்
அதன் குளுமையான நிழல்
அது உன் இனிமைக்கு ஈடாகாது.
தென்றல் காற்றில் சலசலக்கும் மர இலைகள் சத்தம்.  
அது உன் பேச்சுக்கு ஈடாகாது.
வானத்தில் அலை அலையாய் கரு மேகங்கள்.

அவை காற்றிலாடும் உன் கூந்தலுக்கு ஈடாகாது 
தூரத்தே தெரியும் மலை முகடுகள்.
பரந்து விரிந்த புல்வெளிகள்.
அவை உன் அழகிற்கு ஈடாகாது 

by   nsugavanam@gmail.com    91-9176244989

No comments:

Post a Comment